கவிதைத் தொடர் - அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 01. வசுமதி
மாவிலைத் தோரணங்கள்
மனங்கமிழும் மலர்மாலைகள்..
மங்கள நாண் கோர்த்திட
நாணத்தில் நயனங்கள் பார்த்திட..
என் தமக்கைக்கு துணையாய் நீயும்
உன் தமயனுக்கு துணையாய் நானும்..
தமிழுக்கு இணையாய் அமுதனம்
அமுதனுக்கு இணையாய் தமிழும்..
இணைபிரியாத தமிழமுதாய்
பிரிக்கமுடியாத பந்தத்தில்
நாம் சேர்வதென்றோ..??
தமிழமுதன்...
ஹாய் நண்பர்களே..
மீண்டும் நானே..!!
இவ கதை எழுதி டார்ச்சர் பண்றது பத்தலைனு கவிதை தொடருமானு நீங்கள் அலறுகின்ற சத்தம் எனக்கு கேட்குது.. ஆனால் என்ன பண்றது.. நான் எழுதனும்னு முடிவு பண்ணிட்டேனே... அதனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் கரோ ..
நமது கவிதை தொடரின் நாயகன் அமுதன், நாயகி தமிழ்.. அமுதனின் டைரியிலிருந்து - காதல் கவிதையில் பயணிப்போம்..
முதல் பதிவில் குட்டி இன்ட்ரோ மட்டும் தான் கொடுத்திருக்கேன்..
படித்துவிட்டு உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி..!!
அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 02
{kunena_discuss:779}