கவிதைத் தொடர் - அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 02. முதலீர்ப்புவிசை - வசுமதி
மனங்கமிழும் முல்லைப்பந்தலடியில்
மழலைகளோடு மழலையாய்
முல்லையோடு முல்லையாய்..
அபிநயங்கள் கோடி பிடித்துக்
உனையறியாமல் மயக்கினாய் என்னை..
முல்லைகள் வான்மீன்களாய்
கண்களைக் குளிரூட்ட..
நிலவுமகளான உன்னில் நானும்
அறிந்தே சிறைப்பட்டேன்..!!
உன் விழிப்பார்வை எனை சிறையிட்டதும்
உனை அறியாமல் உன் முகம் சிவந்ததை
என் மனப்பெட்டகம் கவிதையாய் வடித்துக்கொண்டது..
கண்கள் தரைநோக்க உதடு சுழித்தபடி
திணறலோடு வாங்க மாமாயென்று
மொழிந்தவுன்னை காணக்கான
திகட்டவில்லையடி என் தமிழே..!!
தமிழமுதன்...
வணக்கம் நண்பர்களே..
முதலீர்ப்புவிசை உன்களை ஈர்த்திருக்கும் என நம்புகிறேன்.. உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் என்னுடன்..
நன்றி..!!
அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 01
அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 03
{kunena_discuss:1143}