கவிதை - கரம் சேர்ந்த காதல்..!! - வசுமதி
விழிப்பூச்சாய் விழிகளில்
விழுந்தாள் வானமகள்..
மனப்பூச்சாய் மலர்ந்தாள்
மன்னவன் மனதில்..
மாலைசூடி கரம்பிடித்தான்
மங்கையை மணநாளில்..
காதலுக்கு சாட்சியாய் கரங்களில்
குட்டிக் கண்ணனும் கண்ணம்மாவும்..
வண்ணமயமாக வருடங்கள்
வர்ணம் பூசி மறைந்தன..
மண்ணுக்குள் மறையும்
மாலைநேரம் புலர்ந்தது..
கரம் கோர்த்த காதல்
கரம் கோர்த்தபடியே கரைந்தது..
{kunena_discuss:1143}