கவிதை - உன்னைக் கண்டவுடன் - திவ்யா பிரபாகரன்
முதல்முறையாக என் இதயத்துடிப்பும் இமைத்துடிப்பும்
ஒன்றிணைந்து சற்று நகர்ந்து சென்ற கால்களை பின்
இழுத்த ஜாலமென்ன ..
ஆர்பாட்டமில்லா அழகால் , மௌனத்தின் மொழியாய் நான்
நேசிக்கவிருக்கும் பெண்ணின் பிம்பமாய் நீ
நின்றிந்தருந்ததென்ன ...
கலைந்த கூந்தலை கோதும் விரல்கள் போகும் பாதையில்
என் விழிகள் தொலைந்ததென்ன ..
கருநிற தேகத்தில் வழிந்ததோடும் வியர்வைத்துளிகள்
பொன்னென்ன மின்னிடும்
மாயமென்ன...
அருகே சென்று அறிமுகம் செய்து உன் கைபிடிக்கையில்
மழலை ஸ்பரிசம் உணர்வது போல் என் இதயம்
சிலிர்த்ததென்ன...
புருவம் சுருக்கி உதடு கடித்து பல வினாக்களோடு நீ ..
அதை புன்னகையோடு ரசித்து உன் கைகளை
குலுக்கியவண்ணம் நான் ...
{kunena_discuss:779}