(Reading time: 1 - 2 minutes)

கவிதை - ஒரு மனம் - திவ்யா பிரபாகரன்

Alone

அன்பு அழுகை மோதல் இவற்றை இருவரும் சேர்ந்து உணர்ந்து பரிமாறிக் கொண்டால் தான் காதல் என்றால்

உன் மீது நான் கொண்ட உணர்வை என்னவென்று அழைப்பது

உன்னை முதல் முதலில் பார்த்த போது தோன்றிய வெறுப்பு

சற்று தள்ளிச் சென்றவுடன் ஏற்பட்ட ஈர்ப்பு

உன் நிறம், முகம், மாறி மாறி வந்து சென்ற அழகு

என்னை மறந்து உன் நினைவுகள் என்னை சூழ்ந்து கொண்ட பிறகு

உன் விழிகளைக் காண ஏங்கிய பொழுது

இது தான் காதலோ என்று சிரித்து விரல் கடித்து

கனவுகளில் மட்டும் உரையாடிக் கொண்டு

தெளிவான குழப்பங்களோடு நடமாடிக் கொண்டிருந்த நொடிகள் அனைத்தும்

மணிகளாக வருடங்களாக மாறிய பிறகும்

கடந்து சென்ற மனிதர்களின் எண்ணிக்கையோ கூடிக்கொண்டே இருப்பினும்

நீ ஏற்படுத்திய தாக்கதிலிருந்தும், காயாத்திலிருந்தும் மீழ முடியாமல் தவித்து

அதை உன்னிடம் வெளிப்படுத்தாததால் என் காதல் வெற்றி  பெறவும் இல்லை

உன்னை இன்னும் மறக்காததால் தோள்வியடையவும் இல்லை…

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.