கவிதை - என்னவன் - திவ்யா பிரபாகரன்
முதல் சந்திப்பில் அவன் விழிகண்டு நான் நாணுவதை ரசிப்பவனோ ...
மெல்லிய உரையாடலில் சிநேகம் வளர்ப்பவனோ ...
மாலையுடன் தாயின் அரவணைப்பை பிரிகையில் ,
என்னை கைகோர்த்து அணைப்பவனோ ...
என் ஆசைகளை தனது கனவாக்கி செயல்படுபவனோ ...
அவனருகே என்னை மீண்டும் மழலையாக்குபவனோ ...
ஊடல் பொழுதிலும் காதலிப்பவனோ ...
அவன் சமைத்து நான் உண்பதைக்கண்டு மகிழ்பவனோ ...
விளையாட்டில் நான் ஏமாறுவதைக்கண்டு சிரிப்பவனோ ...
களைத்து கண் அசருகையில் என்னை மார்போடு சேர்ப்பவனோ ..
நான் மனம்வாடுகையில் நகைத்து , என் புன்னகையில் ஆனந்தம் காண்பவனோ ...
ஒவ்வொரு காலையும் என் முகம் பார்க்க ஏங்குபவனோ ...
இரவு வேளையில் என் நினைவுகளோடு உறங்குபவனோ ...
இவ்வாறு நான் நேசித்த கனவுகளின் உருவமாய் நிற்கின்றான் என்னவன்.
{kunena_discuss:779}