கவிதைத் தொடர் - 02. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்
என்னவன் சிந்தும் வார்த்தைகள்
நெஞ்சினில் சாய்த்து நீ பேசிய வார்த்தைகள்
நீங்காத காவியமாய்
பதிந்தது என் நெஞ்சில்......
என்னிடம் காதல் சொல்லிய
உன் வார்த்தைகள் கேட்கிறது
கானமாய் இன்றும் மனதினில் .....
மழை நீருக்கு ஏங்கி இருக்கும்
செடி போல காத்திருக்கிறேன்
உன் வார்த்தைக்காக....
உன் வார்த்தைகள் சொல்லி தந்திரா
விட்டால் காதலின் அரிசுவடியை
கூட அறிந்திருப்பேனோ...
நீ சிந்தி சிதறிய வார்த்தைகளை
கோர்த்து கட்டிய மாலையுடன்
காத்திருக்கிறேன் உனக்காக....
நூலகத்தில் ஒளிந்திருக்கும்
வார்த்தைகளை விட உயர்ந்தது
நீ என்னை நோக்கி சிந்தும் ஒற்றை வார்த்தை.....
உன் வார்த்தை மழையில் நனைய
ஏங்குகிறேன் ஆனால் நீ
மௌனம் காப்பது ஏனோ....
என்னை நோக்கி நீ சிந்திய வார்த்தைகள்
வானத்து நட்சத்திரமாய்
சிதறி கிடக்கிறது என் மன வானில்....
அழகான பெயராய் தெரிகிறது
என் பெயர் அதை உன் வாயில்
இருந்து கேக்கும் போது.....
இடியை போல் அல்லாமல்
.கானமாய் கேட்கிறது
உன் வார்த்தைகள் ....
மின்னலாய் ஒளிறாமல்
மின்மினியாய் ஒளிர்கிறது
உன் வார்த்தைகள்.....
புயலாய் அடிக்காமல்
தென்றலாய் வருடுகிறது
உன் வார்த்தைகள்.....
தோல்வியை தழுவாமல் வெற்றி
படிக்கட்டில் ஏற வைக்கிறது
உன் வார்த்தைகள்....
கானமாய் நாதமாய் வீணையாய் இசைக்கிறது உன் வார்த்தைகள்
இதமாய் தென்றலாய் மென்மையாய் வருடுகிறது உன் வார்த்தைகள்
மின்மினியாய் மின்னல் கீற்றாய் மின்சாரமாய் ஒளிர்கிறது உன் வார்த்தைகள்
சூரியனாய் நிலவாய் வானத்து நட்சத்திரமாய் ஒளிர்கிறது உன் வார்த்தைகள்
மார்கழியாய் பணிசாரலாய் வெண்பணியாய் குளிர்கிறது உன் வார்த்தைகள்
தோட்டமாய் நந்தவனமாய் பூக்கலாய் மலர்கிறது உன் வார்த்தைகள்........
கவிதையாய் மனத்தில் சேகரிக்கிறேன் உன் வார்த்தைகளை
காவியமாய் மனத்தில் பதிக்கிறேன் உன் வார்த்தைகளை
காதலாய் யாசிகிறேன் உன் வார்த்தைகளை
பூக்களாய் நேசிக்கிறேன் உன் வார்த்தைகளை
மூச்சு காற்றாய் சுவாசிக்கிறேன் உன் வார்த்தைகளை
சிந்திவிடு என்னை நோக்கி உன் ஒற்றை வார்த்தையை ..........
{kunena_discuss:779}