கவிதைத் தொடர் - 05. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்
உயிர் கொடு என்னவனே
ஜீவன் இல்லாமல்
காய்ந்து இருக்கும்
என் மலராத சிரிப்புக்கு
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
தன்னந்தனிமையில் ஒற்றையாய்
தவிக்கிறேன் உன் நெஞ்சத்தில்
என்னை சாய்த்து
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
உன் மூச்சு காற்று இல்லாமல்
சுவாசிக்க தவிக்கிறேன்
வசந்த கால தென்றலாய் வந்து
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
தூசி படிந்த ஓவியமாய்
கலை இழந்து இருக்கிறேன்
சினுங்கும் சித்திரமாய் மாற
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
காலம் போடும் கோலங்களில்
புள்ளியாய் சிதறி கிடக்கும்
என்னை ஒன்றிணைக்க
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
வாழ்க்கை என்னும் போட்டியில்
தோல்வியில் துவளும் போது
வெற்றியாய் வந்து
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
வானத்தில் பூக்கும் நட்சத்திரமாய்
சிதறி கிடக்கும் என்னை
ஒற்றை நிலவாக மற்ற
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
வேர் ஊன்றாத மரமாய்
காற்றில் தத்தளிக்கிறேன்
தூண் வேர்களாய் வந்து
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
நிஜங்கள் தேடும் பொய்களுக்குள்
ஒளிந்து கொண்டு தவிக்கும்
என்னை மீட்க
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
கண்களின் இமையாக
கொலுசின் கீதமாக
பேச்சின் வார்த்தையாக
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
மஞ்சத்தில் மலராக
கடலுக்கு அலையாக
கங்கைக்கு கரையாக
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
கல்லுக்கு சிற்பமாக
ஊஞ்சலுக்கு கயிராக
காற்றுக்கு தென்றலாக
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
சோலைக்கு பூக்களாக
வானத்து விண்மீனாக
மரத்துக்கு பசுமையாக
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
நிலவுக்கு ஒளியாக
இதயத்துக்கு துடிப்பாக
நெருப்புக்கு நீராக
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
மேகத்துக்கு மழையாக
இடிக்கு ஒலியாக
ராகத்துக்கு இசையாக
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
வறியவனுக்கு வள்ளலாக
மின்னலுக்கு ஒளியாக
ரசிகனுக்கு கண்களாக
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
சங்குக்கு ஓசையாக
குழலுக்கு நாதமாக
காதலுக்கு காதலாக
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
ஓவியத்தின் அழகாக
மழலையின் மென்மையாக
சுவாசத்தின் மூச்சாக
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
வீணைக்கு விரலாக
பாதைக்கு வழியாக
பக்திக்கு கடவுளாக
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
மலருக்கு மணமாக
மங்கைக்கு மணாளனாக
வலிக்கு ஆறுதலாக
உயிர் கொடு என்னவனே !!!!!!!!!
என்னவனுக்கான தேடல் தொடரும் .....
{kunena_discuss:779}