(Reading time: 1 - 2 minutes)

கவிதை - கனவுகளில் வாழ்கிறேன் - அனுபாரதி

livingDreams

மேகங்கள் குளிர்கையில் பொழியும் மழையினை போல் 

உள்ளங்கள் சேர்கையில் நீயும் தான் 

பொழிந்தாய் அன்பெனும் மழையை 

வியந்தேன் இரசித்தேன் 

சிலிர்த்தேன் சிரித்தேன் 

பரவசமடைந்தேன் 

நதியென ஓடவிட்டேன் உன் நேச ஊற்றை 

என் உள்ளம் தனில் 

பாலையாய் இருந்த இடமெல்லாம் 

சோலையாய் மாற்றம் 

சென்ற இடமெல்லாம் தேனாய் தித்திப்பு 

நேசப்பூக்கள் அழகாய் பூத்தது என் மனமதில் 

மலர்களின் மணம் தென்றலாய் வீசியது என் சுவாசமதில் 

கண்மூடி ரசிக்கையில் அறியவில்லை 

கண்டதெல்லாம் கனவாய் மறையுமென 

நிதர்சனமென நினைத்ததெல்லாம் கற்பனைகளாய் 

என் கன்னம் தொட்ட கண்ணீர் மட்டும் நிஜமாய் 

அறிந்தேன் 

உன் நேசமெல்லாம் கானலென 

தெளிந்தேன் நிகழ்ந்ததெல்லாம் காட்சிபிழையென 

இருந்தும் என்ன ??

போதும் அந்நொடிகளே

கானலாய் ஆனாலும் 

காட்சிப்பிழையாய் போனாலும் ..  

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.