கவிதை - கனவுகளில் வாழ்கிறேன் - அனுபாரதி
மேகங்கள் குளிர்கையில் பொழியும் மழையினை போல்
உள்ளங்கள் சேர்கையில் நீயும் தான்
பொழிந்தாய் அன்பெனும் மழையை
வியந்தேன் இரசித்தேன்
சிலிர்த்தேன் சிரித்தேன்
பரவசமடைந்தேன்
நதியென ஓடவிட்டேன் உன் நேச ஊற்றை
என் உள்ளம் தனில்
பாலையாய் இருந்த இடமெல்லாம்
சோலையாய் மாற்றம்
சென்ற இடமெல்லாம் தேனாய் தித்திப்பு
நேசப்பூக்கள் அழகாய் பூத்தது என் மனமதில்
மலர்களின் மணம் தென்றலாய் வீசியது என் சுவாசமதில்
கண்மூடி ரசிக்கையில் அறியவில்லை
கண்டதெல்லாம் கனவாய் மறையுமென
நிதர்சனமென நினைத்ததெல்லாம் கற்பனைகளாய்
என் கன்னம் தொட்ட கண்ணீர் மட்டும் நிஜமாய்
அறிந்தேன்
உன் நேசமெல்லாம் கானலென
தெளிந்தேன் நிகழ்ந்ததெல்லாம் காட்சிபிழையென
இருந்தும் என்ன ??
போதும் அந்நொடிகளே
கானலாய் ஆனாலும்
காட்சிப்பிழையாய் போனாலும் ..
{kunena_discuss:779}