கவிதை - என் வாழ்க்கை பயணமே... - அனுபாரதி
என் வாழ்க்கை பயணமே........
எதை நோக்கி செல்கிறேன்?
எதை அடைய துடிக்கிறேன்?
வெற்றியில் நான் திளைத்திருக்க
சட்டென்று செல்கிறாய் வீழ்ச்சியின் கோட்டைக்கு...
மகிழ்ச்சியினை நான் கேட்க
அடைக்கிறாய் துயரச் சிறையில்...
வீழ்ந்தால் மழையாவேன்
எழுந்தால் மரமாவேன்..
எரிந்தால் ஒளி தருவேன்..
குளிர்ந்தால் பனி ஆவேன்...
கரைந்தால் காற்றாவேன்....
இனித்தால் தேனாவேன் ..
கசந்தால் மருந்தாவேன்..
என்றும் உன் வழியே நான் வருவேன்.
இருந்தும் மகிழ்ந்திருப்பேன்
மலர்ந்திருக்கும் முகத்துடனும்
விரிந்திருக்கும் இதழுடனும்
நிறைவான மனதுடனும்
{kunena_discuss:779}