கவிதை - கொள்ளை போனது மனது - நர்மதா சுப்ரமணியம்
அவன் பார்வையில்
அவன் பேச்சில்
அவன் நடையில்
அவன் அழகில்
கொள்ளை போகவில்லை
அவளின் மனது....
திருமணத்தின் போது
பெற்றோரை பிரிந்த
அவளின் துன்பத்தை
தனதாய் எண்ணி
அவளை தேற்றியப் போது...
'உனக்கு யாவுமாய்
நான் இருப்பேன்' என்று
அவன் வாக்களித்தப் போது...
அவளின் லட்சியத்தை
மனதின் எண்ணங்களை
ஆசைகளை அறிந்து
அவன் நிறைவேற்றியப் போது...
அவளின் துன்பத்திற்கு
தன் தோள் கொடுத்து
அவளின் இன்பத்திற்கு
தன்னையே கொடுத்தப் போது...
சாராலாய்
பாவை நெஞ்சில்
தேன் மழை பொழிய
கொள்ளை போனது
அவளின் மனது
அவனிடம்
அவளறியாமலே....
{kunena_discuss:779}