கவிதை - உயிரளித்தவள் - நர்மதா சுப்ரமணியம்
உன்னுடைய கண்ணீர்
அவளின்
கண்ணீர் ஊற்றை பெருக்கும்!!!
உன்னுடைய துக்கம்
அவளின்
நிம்மதியை பறிக்கும்!!!
உன்னுடைய இன்பம் மட்டுமே
அவளின்
வாழ்வாதாராமாய் இருக்கும்!!!
அவளை விட அழகாய்
உன்னை யாரும்
நேசித்திருக்க முடியாது!!!
அவளை விட அதிகமாய்
உன் மேல் யாரும்
பாசம் வைத்திருக்க முடியாது!!!
அவளை விட மேன்மையாய்
உன்னை யாரும் வழி நடத்தி சென்றிருக்க முடியாது!!!
அவளின் உதிரத்தில்
பிறந்தவன் நீ!!!
அவளின் உயிரில் கலந்தவன் நீ.!!!
அவளை போற்றி பேணிக்காத்திடு
தெய்வத்தின் அருளை பெற்றிடு!!!
அன்னையென தெய்வம்
உனக்கு அளித்த வரம் அவள்...
{kunena_discuss:779}