(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதலிசை - நர்மதா சுப்ரமணியம்

love-music

கான குயிலோசையாய் நீ
கான இன்னிசையாய் நான்

உன் குரலோடு 
என் ஓசை இணையும் வேளையில்
என் மனம் மயங்கும் மாயமென்னவோ???

உன் பாடலின் உணர்ச்சியில்
நான் மெய்மறந்து
கிறங்கி போவதன்
காரணமென்னவோ????

நீ எனக்கே எனக்காய்
உருகிக்கரைந்து பாடுவதாய்
தோன்றும்
எண்ணமும் ஏனோ???

என் மனதினிசை
இன்னிசையாய் 
உன்னை தீண்டவில்லையா???

என் பாடலின் உணர்வு
உன் உள்ளுணர்வை 
தூண்டவில்லையா???

பிறரின் மனதை மயக்கும்
என் குரலில்
உன் மனம் மயங்கவில்லையா???

உன் மீதான என் காதல்
உனக்கு விளங்கவில்லையா???

பாடல் வரிகளாய் நீயும்
இசையாய் நானும் 
காதலால் மனம் கவர்ந்து
நிறைந்து வாழ
காத்திருக்கிறேன் 
கண்மணியே!!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.