கவிதை - தனிமையின் தீவினில் - சிந்தியா ரித்தீஷ்
தனிமையின் தீவினில் நான்
புயலின் மடியினில் அகப்பட்ட
ஒரு பூம்பாவை
தீவைச் சூளும் என் விழியின் அருவி அது
இலையாய் மிதக்கின்றது
என் மனமும் அதில்...
கரையேறத் தத்தளிக்கும்
மனத்திடத்தில்
என் மனுக்கோரல்...
கரை கண்டதும்
உன் கதை முடிந்தது
ஏனெனில்
வெளியில் பாலை மணல்...
மணல் மேட்டில்
முள்வேலி
குத்தியே உறிஞ்சி விடும்
உந்தன் குருதியதை...
தெரிந்தும் தவிக்கும்
பேதை மனம்...
உன் விழிகளின்
அருவியினைப் பொறுக்காமல்
இறுதியில் அதிலே
என் சங்கமம்
வழிந்தோடி வருகின்றேன்...
வீழ்ச்சியிலே.....
இப்படிக்கு
*கண்ணில்
விழுந்த தூசி*
{kunena_discuss:779}