கவிதை - உருகும் மெழுகாய் - சிந்தியா ரித்தீஷ்
உருகும் மெழுகாய் நானும்
உருகி உறைந்தேன்
உந்தன் நினைவுகளின் வெப்பத்தினால்
காலங்கள் கரைந்தாலும்
கனவுகளிலும் உந்தன் முகம்
மறக்க எண்ணியே நினைத்து நினைத்து
கடக்கின்றன என் நிமிடங்கள்
கரையாத பாறையைக்கூட
கரைக்கும் வலிமை
உண்டு-கண்ணின் துளிகளுக்கு
இருந்தும் தோற்கின்றது
இதுவும் என்னிடத்தில்
உன் ஞாபகங்களை
கரைத்திட முடியாமல்
இறந்து போன உன் நிஜங்கள்
துரத்துகின்றன தினமும்
என்னை நிழல் போல
அதனாலோ நானும் வாழ்கின்றேன்
யாவரையும் வெறுத்து ..
இருட்டில் வாழும் வௌவாலைப் போல
{kunena_discuss:779}