(Reading time: 1 - 2 minutes)

கவிதை - சிந்தை இன்று  - சிந்தியா ரித்தீஷ்

rainWindow

தொலைதூரமாய்
மழை சிந்தும் மாலை வேளையொன்றில் .....


ஜன்னலோரம் வழியும்
துளி மழைபோல்
சாரையாய் வழிகின்ற 
நினைவுகள் பல ....

இனிமையாக பின்னிருந்து
இசைக்கும் இதமான இசை 
என்னை இயக்குகின்றது

இளங்காற்று என் மேனி தழுவ
கண்களை மூடி அனுபவிக்கின்றேன் 
உந்தன் வாசமதை ....
பின்னிருந்து எனை இழுக்கின்றது என் சிந்தை மயக்கி 

இளஞ்சூடாய் என் இதழ் பதித்து 
உள்ளிழுக்கும் போது 
நாசியைத் துளைத்து உயிர்வரை 
இறங்கி கலக்கின்றது.....

 

*மழைவேளைத் தேனீர்ச்சுவை*

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.