(Reading time: 1 - 2 minutes)

கவிதை - எப்படி கரை சேர்வேன் - கலை யோகி

இதோ நான் நாளும் 

காத்திருந்த இனிய நாள்...

இன்னும் சிறிது நேரம்தான்..

எதிர்பார்த்து பூத்திருக்கிறேன்..

ஏக்கங்கள் நிறைந்த கண்களொடு..

கனவில் கண்டதை கண்ணெதிரே

காண போகிறேன் கன நேரத்தில்..

மனதில் ஏனோ படபடப்பு..

கைகள் கட்டுப்பாட்டை மீறி கடகடவென ஆடிட.... 

தூறமாய் நீ தெரிகிறார்...

துள்ளி எழுந்து நான் பார்க்கிறேன்...

கனவுகளை தாங்கி வந்த என் இதயம் சற்றே கனத்திட உணர்ந்தேன்...

இன்னும் அருகில் வந்தாய்

இவள் தான் என்னவள் என்றே இயம்பி இருமணம் இணையும் விழா என்று உன்றன் திருமண அழைப்பு தந்தாய்.... 

இப்போதே இதயமது வெடித்திட கூடாதா என்று வேண்டினாலும்

இன் முகமதை இன்னும் மலர்சியாய் காட்டி கொண்டு... தவறாமல் வருவேன் என தழுதழுக்க கூறி விட்டு

தட்டு தடுமாறி வந்தமர்ந்தேன் இல்லிற்கு...

இப்போது சொல்லுங்களேன் இனிய நண்பர்களை...

எப்போது நான் மீள்வேன்..

எப்படி தான் கரை சேர்வேன்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.