கவிதை - ராசாத்தி - ரம்யா
பின்னலிட்ட கூந்தலை கொண்டையாக முடிஞ்சிகிட்டு
பாவாடை தாவணி யை அள்ளி இடுப்பில் சொருவிகிட்டு
குடம் தூக்கி நீ போகையிலே உத்துப் பாரு ராசாத்தி
தண்ணி இல்லை குடத்துகுள்ள என் மனசு தான் தளும்புதடி
நீ அனைச்சுகிட்ட போதையில குடம் மெல்ல துவண்டு விழ
பாழாபோகுதே தண்ணின்னு தூக்கி நீ உன் இடுப்பில் ஏத்தி விட
பித்தல குடத்துக்கும் பித்து தான் ஏறிபோச்சு
என்ன பார்த்து ஏளமா பல்லுகாட்டி சிரிச்சிடிச்சு
வாழத்தண்டு கையால குடத்த நீ பிடிச்சிருக்க
உள்ளிருக்கும் தண்ணீருக்கும் உன்ன தொட ஆச தானோ
துள்ளி குதிச்சு உன் கன்னம் தொட ஓடிவர உன்
உதட்டோர மச்சத்தில லட்சனமா தொட்டதடி
ஒய்யாரமா நீபோக உன் கால் கொலுசும் கொஞ்சுதடி
உன் கால் தொடாத கல்லும் தான் கரைஞ்சி மண்ணா போனதடி
உன் மர்மம் தொட்ட தாவணியோட உன் கொண்டைபோட்டி போடுதடி
பின்னல் ஜடை அவிழ்த்து உன் மேல பரப்புதடி
அவிழ்ந்து விழுந்த கூந்தல அழகா தான் தள்ளி விட்ட ஆனா
பாவி என் கண்ணுக்கு உன் வியர்த்த இடுப்பு காட்டிபுட்ட
உன் கெண்டகாலே என் தூக்கம் கெடுத்துடுச்சு
இடுப்புமச்சம் மட்டும் இரக்கம் காட்டுமா
நாள்கணக்கா காத்திருக்கேன் கண்முழிச்சி பாத்திருக்கேன்
இன்னைக்கு தான் உன் கண்ணு எனை பார்க்குதடி
தண்ணிய பத்திரமா கொண்டு போகும் ராசாத்தி
என் உசிரும் உம்பின்னால பத்திரமா எடுத்து போ