கவிதை - என்றுந்தன் விழி சேருமோ? - சந்யோகிதா
காத்திருக்கிறேன் இராஜகுமாரா….!
கன்னிப்பெண் இங்கே..
கணக்கிலடங்கா காதல் கனவுகளோடு……!
இருள் வாசலின் நிசப்த இசையில்..
காதல் கனவினை காவியமாக்குகிறேன் கவித்தமிழில்…..!
என்னிடத்தில் நீ…….!!!
காரிருளில் கண்கூசும் ஒளிக்கற்றையாய்..
பகலில் பின்தொடரும் கருநிழலாய்..
கோடைகால மழைச் சாரலாய்..
குளிரில் மூட்டிய தீப்பிழம்பாய்..
இரவின் மடியில் இன்னிசையாய்..
வலியினில் வருடும் மயிலிறகாய்..
பாலைவனத்தில் கண்ட கானல்நீராய்..
முட்பாதையில் மலர்ந்த முல்லைமலராய்..
நித்தமும் இதம் தந்து செல்கிறாய்
எனது இமைக்கா விழிகளில்…!!
கனவுத்தாளில் காதல்தூரிகை கொண்டு
நான் தீட்டும் கவி என்றுந்தன் விழி சேருமோ?
{kunena_discuss:779}