கவிதை - காதலொளி - சந்யோகிதா
மலைமக்களினுள் மறைந்து கொள்ளும் வெய்யோனே.....!
பல மைல்களுக்கப்பால் ஒய்வெடுப்பதெனோ?
உன் விரற்கிரண் தீண்டி மறுநொடி மலர
கமலமங்கை காத்திருப்பதை மறந்தாயோ?
உன் உதயவரவினை நாற்றுநங்கை வயல்வீட்டில்
எதிர்நோக்கி இருப்பதை அறிவாயோ??
காரிருள் காட்டில் கலைந்து போன
கனவுவழிகளை கண்டெடுக்க வருவாயோ?
காலமெல்லாம் காதலொளி வீச காத்திருக்கும்
கன்னியின் கரம் கோர்ப்பாயோ??
{kunena_discuss:779}