(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதல்கொற்றக்குடை - சந்யோகிதா

loveUmbrella

தாய்முகம் காணும் சேயாய்

தாயுமானவனே உனை காணும் நொடி…!

தேன்சிட்டு மயங்கும் மலராக

தேவனே உன்னில் மயங்கும் நொடி…!

மண் சேரும் மழையாக

மன்னவனே உனை சேரும் நொடி…!

புல்லாங்குழல் நிறையும் காற்றாக

புயலோனே உன்னில் நிரம்பும் நொடி…!

ஆழி கலக்கும் ஆறாக

அன்பே உன்னில் கலக்கும் நொடி…!

நூறாண்டுக்குப் பின்னால்

நெடுந்தூரமாயினும் காத்திருக்கிறேன்……….

உன் காதல்கொற்றக்குடையில்

என்றென்றும் வீற்றிருக்க…..!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.