(Reading time: 2 - 3 minutes)

கவிதை - என் கவி நாயகனே..! - சந்யோகிதா

heartProposal

என் கவி நாயகனே..!

காட்சிகள் யாவும் நீயாக வேண்டும்

கருவிழி நடுவில் உன் பிம்பம் வேண்டும்

கானல்நீர் கனவுகள் நிஜத்தினில் வேண்டும்

கல் நெஞ்சமதில் நீ நுழைந்திட வேண்டும்

கண் இரண்டில் காதல் சொல்லிட வேண்டும்

 

உற்றோர் கூடி மணம் புரிந்திட வேண்டும்

சான்றோர் பலரும் வாழ்த்திட வேண்டும்

ஈன்றோர் நெஞ்சம் நிறைந்திட வேண்டும்

காதலின் மகத்துவம் படித்திட வேண்டும்

என் மனக்கதவினை நீ திறந்திட வேண்டும்

 

என் ஐந்தைந்து வருடம் நான் சொல்லிட வேண்டும்

உன் முற்பிறவி கதைகள் நான் கேட்டிட வேண்டும்

கவலைகள் உன் தோளில் மறைந்திட வேண்டும்

உன் பிணி மருந்தாக நான் மாறிட வேண்டும்

உன் சொல்லில் நான் நிமிர்ந்திட வேண்டும்

 

உன் பாதையில் நான் பூத்திட வேண்டும்

என் நெற்றியில் நீ முதல் இதழ்முத்த திலகமிட வேண்டும்

அன்புமலர் உன் அணைப்பினில் மலர்ந்திட வேண்டும்

உன் சுவாசம் நான் ரசித்திட வேண்டும்

உன் துடிப்பிசையில் நான் மயங்கிட வேண்டும்

 

உன்னில் நான் கலந்திட வேண்டும்

அகிலம் யாவும் உன்னருகில் மறந்திட வேண்டும்

காமம் தாண்டிய காதல் நாம் கண்டிட வேண்டும்

காலம் பல கடந்தும் காதலில் நாம் மூழ்கிட வேண்டும்

அன்பே….!

இவையாவும் இந்நொடியே நிகழ்ந்திட வேண்டும்..!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.