கவிதை - கற்பனைக் காதலனே..! - சந்யோகிதா
கற்பனைக் காதலனே..!
பரணி துயில்கையில் உன்னிடத்தில்
ஒப்புவிக்குறேன் என் மெளனஓசைகளை..!
கற்சிலை கடவுளின் பக்தனாய்
கனவினில் உன்னிடம் கதறுகிறேன்..!
துரோகக்களை செழித்துவிட்ட கழனியில்
கன்னிப்பயிரிங்கே கலங்கி நிற்கிறேன்..!
இலையுதிர் கால சறுகுகளாக
அலைமோதும் என்மனதின் உணர்வுகள்..!
தேக்கிய வேதனைகள் நிலவொளியில்
கண்ணின் நீர் முத்துக்களாக..!
என் தவப்பயனாம் உன் தாமதம் கண்டு
என்னுள்ளே தினமும் மறுகுகிறேன்..!
விதியின் சதியோ..?
என்னுள் அவதரித்த உன் மீதான நேசம்....
அன்று கனவுகளாக...!
இடையில் கவிதைகளாக...!
இன்று கண்ணீராக...!
நாளை என்னாகுமோ..?
{kunena_discuss:779}