(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதல் வேதாந்தம் படிக்கிறேன் கனவுலகில்…! - சந்யோகிதா

loveDress

காதலா…!

உன் நேசம் உணர்த்தும் ஒரு நொடிப்பார்வை போதும்…

உன் மகிழ்ச்சி மலரும் இதழ் புன்னகை போதும்…

உன் காதலிசை கேட்கும் குரலோசை போதும்…

உன் ஆளுகை உணர்த்தும் அருகாமை போதும்…

உன் சுகபோகம் சொல்லும் சுவாசக்காற்று போதும்…

உன் அன்பின் அங்கீகாரமான சிறுதீண்டல் போதும்…

எனக்காக விரயமாகும் உன் கடிகாரமுள் நேரம் போதும்…

நடைப்பயணத்தில் நம்மிடையே நிலைக்கும் இடைவெளி போதும்…

கடற்கரை மணலில் பதியும் நம் காலடிகள் போதும்…

நான் எண்ணற்ற காதல் வேதாந்தம் படிக்க…!!!

என்னவோ…!

நிஜத்தினில் நான் இன்னும் சிறு விளையாட்டுக்குழந்தையாய்

இக்கண்டத்தின் கண்ணோட்டத்தில்…!

எதிர்மறையாக….

உன் நிழலுடன் கனவுலகில் நானும் கற்றுக்கொண்டிருக்கிறேன்

பிறவிப்பயனாம் நம் நேசமிகு காதல்வாழ்க்கையை…!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.