கவிதை - கேளிக்கைப் பொருளாகிறேன்...! - சந்யோகிதா
நாளெல்லாம் நானும் கடந்து செல்கிறேன்
நடிப்பு நாடகப் பாதைகளை
புன்னகைப் பூவைச் சூடிக்கொண்டு...!
ஆறுதல் தேடி உள்ளம் ஓடினாலும்
அன்புரிமை தராசில் அளவு பார்க்க
எவருக்கும் தகுதியில்லை...!
ஏனோ..........
ஊரறியா உருவமறியா உன்னிடத்தில்
நான் உரைத்திட நினைக்கிறேன்
என் நெஞ்சின் ஓராயிரம் நிகழ்வுகளை...!
நீ செவிமடுப்பதாய் எண்ணி
உன்னிடத்தில் மட்டும் உடைந்து
உள்ளத்தில் ஆறுதல் அடைந்து
கற்பனையில் காதலும் கொண்டு
கேளிக்கைப் பொருளாகிறேன் காரிருளுக்கு...!!!
{kunena_discuss:779}