கவிதை - யாரறிவாரோ....? - சந்யோகிதா
நல்லொழுக்கத்திற்கும் நெஞ்சத்திற்கும்
நீடிக்கும் நெடுந்தூரம் என்றும்
நிலைத்து நிற்கும் நெகிழியாக...!
கண்ணில் கனவுகள் பல தேக்கி
கடமை செய்த காரிருள்கள்
கற்றறியாத வரலாறாக...!
கண்ட கனவு காட்சிகள்
கண்முன்னே சிதறிய போதும்
நிழற்பொம்மையாய் உயிர் நீத்தோர்...!
ஏட்டுக்கல்வி பல தாண்டி
ஏமாற்றுக்கயிறு எஜமானியரின் கைவசம்
பாமரரை தூக்கிலிடும் ஆயுதமாய்...!
ஏக்கம் பல நம் நெஞ்சில்
இருந்தும் தினம் இயற்றிச் செல்கிறோம்
கண்டும் காணாத கவிதையை...!
கிணற்றுத் தவளை ஒன்று
கடல்நீரைக் கண்டதன் கதையாய்
இதன் கரை யாரறிவாரோ....???
{kunena_discuss:779}