(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மாயக்கள்வன் சிறைப்பட்டதேனோ? - சந்யோகிதா

dream

என் விழிக்கதவினில் விலகி

ஒளிந்து மகிழும் மாயக்கள்வனே...!!!

என் மதிற்சுவரினில் மட்டும்

அகப்பட்டுச் சிறைப்பட்டதேனோ..?

உன் சிந்தனையால் எனைச் சிறைவைக்கவோ?

என் தனிமையின் மெளனமொழியில்...

உதட்டோரச்செடியில் உதிரும் புன்னகைப்பூவாய்..!!

உள்ளக்கோயிலில் உறங்கும் உற்சவத்தேராய்..!!

என் உலகினை உற்றுநோக்கையில்...

கண்அணையில்  தேக்கிய கற்பனை நீராய்...!!

கவிக்கிறுக்கல்களின் உயர்வு நவிற்சியாய்..!!

என் இரவின் கருங்குழல் இருளில்...

இசைத்தேன் பாடலின் இன்பச்சுவை வரியாய்..!!

இதழ்ப்புவியில் புதைந்த இதிகாசச் சொல்லாய்..!!

என் நாழிகையின் நாளைய தேடலில்..

தொலைதூரவிண்ணில் அறியா

விண்மீனாய்..!!

தொலைநோக்கிவிழியின்  பசுமை வழியாய்..!!

கண்ணில் காணாமல்,

செவியில் சேராமல்,

உன்னில் களவு போனேன் கள்வா...!!

ஊணும் உயிரும் நீயாக...!

உள்ளமெல்லாம் உன் எண்ணமாக..!

உயிர்க்காதலுடன் உலா வருகிறேன்..!

உனக்காக....!!!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.