கவிதை - பொய்யுரைத்துச் செல்கிறாய் நீ…! - சந்யோகிதா
மனம் விரும்புவனே….!!!
கனவில் மலர்ந்து
காதல் மணம்வீசி
கடிகாரமுள்ளில் கலந்து
கற்பனையிலும் சாட்சிகளின்றி
எனை ஆட்கொள்கிறாய்…!
நெஞ்சம் சுமக்கும்
நினைவுகளிலும் இசைவின்றி
நுழைந்து நித்தமும்
எனைக் களவுகொள்கிறாய்…!
வெளிச்சத்தில் ஆழ்கடலின் மெளனமாக…
இருட்டில் அலைகடலின் இரைச்சலாக…
காதல்மொழி பேசிச் செல்கிறாய்
விரைவில் வருகிறேன் என்று…!!!
வாசலில் வண்ணக் கோலமிட்டு…
வாசம் கொள்ளா மலர்சூடி…
வரவேற்க காத்திருக்கும்
வேளையில்தான் நான்
உண்மை உணருகிறேன்…
நாளும் நீ பொய்யுரைத்துச்
செல்கிறாய் என்று….!!
{kunena_discuss:779}