கவிதை - நம் காதல் - சந்யோகிதா
கண்காணா கடல் தேசத்தில்
காதலைத் தேக்கி
கடமையாற்றும் என் மன்னவனே...!
உனது நினைவுகள்
உயிரில் உறைகின்றன..!
உள்ளத்தில் துளிர்க்கின்றன..!
செவிகளின்றி
சொற்களின்றி
காட்சிப்புலனின்றி
நிசப்த ரீங்காரத்தில்
முற்றுப்புள்ளியின் முடிவில்
மங்கலான கனவுப்புலனில்
புன்னகைக்கிறேன்...!
கனவுதேசத்தில் நேசத்துயிலாக
இதமாய் வருடிச்செல்கிறேன்...!
உன் காதல் சொல்லும்
கருவிழிகளைக் காண
கணநொடிகளையும் கடக்கிறேன்...
கணக்கிலடங்கா நூற்றாண்டுகளாக...!
கற்றறிந்தேன்...
காத்திருப்பும் சுகம்தான்
நம் காதலில்..!
{kunena_discuss:779}