கவிதை - விரைந்தோடி வா..! - சந்யோகிதா
பொங்கி வரும் தென்றலும்
போதையூட்டும் மழைச்சாரலும்
கண்ணைக் கூசும் கதிரவனும்
இதமளிக்கும் இளஞ்சூடும்
பரவசம் தரும் பசுமையும்
குளிரூட்டும் நிலவொளியும்
இனிமை குறையுமோ...?
நிரூபிக்கின்றன உன் நினைவுகள்..!!
நிழற்பட ஒளியில் என் நெஞ்சம் நுழைந்து என்னை உன்னில்
தஞ்சம் புக வைக்கிறாய்..!
வசீகர புன்னகையில் எனை
வாரி சுருட்டிச் செல்கிறாய்..!
கண்ணிய காதலில் என்
கற்பை சோதனை இடுகிறாய்..!
தீண்டாத் தொலைவில் எனை
மொத்தமாய் உரசிச் செல்கிறாய்..!
வஞ்சனைக்காரா...!
போதும் உன் காதல் யுக்திகள்..
விடைகண்டு விட்டேன் நான்..
விரைந்தோடி வா வினாடியில்...!!!