கவிதை - என் உயிர்பாதி நீ...!! - சந்யோகிதா
மாயக்குரலின் மர்மமென்ன..?
சொற்போர் நிகழ்த்தும் நான்
சொற்களின்றி வார்த்தைகளின்றி
நிராயுதபாணியாய்..!
வியத்தகு விசித்திரமென்ன..?
உன் கேள்விக்கணைகள்
எனைத் தாக்கும் முன்
வீழ்ந்தேன் நான்
உன் காந்தக்குரலில்..!
விழிகளால் பல வித்தைகள்
நீ சொல்ல நிலத்திடம் நீதி கேட்க
காத்திருக்கிறேன் நானும்...!!!