கவிதை - நினைவூட்டல் - சந்யோகிதா
உயிரே...!
உனைநோக்கி
உருகும் என்னுயிரை
உறையவைக்க முயல்கிறேன்..
உன்னிடம் என்னுள்ளத்தை
உரைக்காமல்...!
உறக்கம் தொலைத்து
உனைத் தேடுகிறேன்..
தேடலின் முடிவில்
உருகிய என்னுயிர்
உன்னிடத்தில் தஞ்சம்...!
உண்மைகண்டு உவகையுடன்
மங்கல நாளில் மங்கையிவள்
மன்னிப்புக்கோர மனதினுள்
நாளும் பல நினைவூட்டல்...!!!