(Reading time: 1 - 2 minutes)

கவிதை - உனக்குள் தொலைகிறேன்..! - சந்யோகிதா

Love

தமிழ் எழுத்துக்களே..!

உன் புள்ளிக் கண்களில் 

ஓரமாய்ப் பார்த்தால் என்ன?

ஒளித்து வைத்த நேசமும்

ஒளிசிந்தி என் கண்கூசிடுமோ..?

உன் வாக்கிய முடிவில் 

செவ்விதழ் திறந்தால் என்ன?

அளந்து வைத்த அன்பும்

அள்ளாமல் என்னில் சிதறிடுமோ..?

இலக்கணம் இடம் மாறினாலென்ன?

இவ்வுலகம் எனை தூற்றினாலென்ன?

என் கலங்கியமனம் உன்னில் 

நித்தமும் அமைதித் தடாகமாக

மொத்தமாய் உனக்குள்

தொலைகிறேன்..!

விழிப்பார்வையால் வேண்டாம்...

சொல்மொழியால் வேண்டாம்...

அரும்பொருளில் உன் காதல் சொல்..!

அருட்தவங்கள் புரிந்தேனும்

வாழ்வின் கல்லறை வரை

துணை வருகிறேன் காதலனாக...!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.