கவிதை - நிகழ்காலம் போதுமெனக்கு..! - சந்யோகிதா
என் எண்ணங்களே....!
சற்று ஓய்வெடுங்கள்..
உறங்கட்டும் அவன் சிந்தைகள்..!
உரக்க கத்தவும் முடியாமல்
உள்ளுக்குள் தாழிடவும் முடியாமல்
என்னை வதைக்கும் என்
எதிர்கால வாழ்க்கை கனவுகளே...
என்னைக் கடந்துசென்று விடுங்கள்..!
நிகழ்கால நிம்மதி போதுமெனக்கு!
நான் கடந்தபாதையின் சரித்திரம்
துணைவரும் கைபிடித்து என்னோடு
கடக்கப்போகும் மார்க்கம் முழுதும்..!
எதிர்காலம் நிகழ்காலமானால் அன்று
வாழ்ந்துகொள்கிறேன் ரசனையோடு..!!