(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நான் கடந்தபாதை - சந்யோகிதா

dark-and-lonely-road

கால்கடுக்க நான் கடந்தபாதை 

பல்லிரவுகளின் கடிகாரம் அறியும்

கண்கள் மறைத்த என் கண்ணீரின்  

பல்லவிகள் பற்பல அவை பாடும்

ஏட்டளவில் கல்வி கற்று

கண்ணளவில் கனவு கண்டு

பெயரளவில் பயணிக்கிறேன்

பொன்சுமையாம் என் பணிகளை

இறக்கவும் இசைவின்றி..!

சுமக்கவும் சம்மதமின்றி..!

பாதத்தால் வருடியே போகிறேன்

பாதாளப் பாதையின் 

முடிவொன்றைத் தேடி..!

சுமைதாங்கியாய் சில உறவுகள்

சிறப்பாய் சாட்சி சொன்னாலும்

சுரங்கமாய் சுற்றும் தீவினையை

சுமப்பதென்னவோ நானல்லவா..?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.