கவிதை - திருமணம் - தானு
விரிந்த உலகில்
விழித்துப் பார்
விழியசைவில்
விளக்கமறிவாய்
வரைந்து செழிக்கும்
உயிரோவியச் செடியாய்
உயிர் துளிக்கும்
உறவின் பிணைப்புத்தான்
இதுவன்றோ
காத்திருந்தமங்கையவள்
கச்சிதமாய் கரம் பிடிக்க
ஆடிப்பாடி உறவுகள் மகிழ
ஆண்மகனும் கரம் பிடிப்பான்
பார்த்திருந்தோர் கருவிழிகள்
கோலமிட்டு அசைபோட
வாசமலர் பொழிந்து
வானவரும் வாழ்த்திடுவார்
காற்றுக்குழல்களிடையே
காதல் பேசிக் காலம் செல்ல
வற்றா அன்பதனை
வாரிக் கொள்ள வாரிசு வரும்
வாழ்க்கை ஒரு வட்டமடா
வாழ்ந்துதான் பார்த்துவிடு
விட்டம் விடையளிக்கும்
விடியல் தனை விளக்குவதாய்