கவிதை - ஓய்ந்து விடுங்கள் - தானு
பாறை நடுவே சிக்கிக் கிடக்கும் சோக
உணர்வுகளப் பிரித்து எடுத்து
ஓய்வு கொடுத்தேன் நானாக
உரித்த உடமைகள்
உரிமையற்று வெறுமையாக
உதிர்ந்து கிடக்கிறது
ஓய்ந்து விடுங்கள்
வடித்த கண்ணீர் பலனற்று
வரையறைகளற்று
வரம்பு மீறியது
ஓய்ந்து விடுங்கள்
சரிந்த உடலில் சலனமில்லை
சகித்துக் கொள்ள
சமயம் இல்லை
ஓய்ந்து விடுங்கள்
போரில் சிதைந்த உயிர்
போகும் இடம் அறியாது
பாடையிலே கிடக்கின்றன
ஓய்ந்து விடுங்கள்
வீரத்தை வீசி எறிந்து
வீராப்பாய் வீறு கொண்டீர்
வீடிழந்து வீணாய்
வீதி வழி அலையத்தானோ
ஓய்ந்து விடுங்கள்
இரத்தக் குழல்களிடையே
துப்பாக்கி குண்டு
இன்னும் ஏன் இந்த போராட்டம்
ஓய்ந்து விடுங்கள்