கவிதை - சண்டைக்கோழிகள் - தானு
மற்றவர் புன்னகைக்க
பெற்றவர் மனம் சலிக்க
சாதனை என நினைத்து
வேதனையை விலைக்கு வாங்க
வாரப்பாடாய் பெண்கள் கூட்டம்
வாரி இழுத்து சேலை மடித்து
சிகையை குலைத்து
முனைப்பாய் வந்தனரே
கத்தரித்தோட்டத்தின் சர்ச்சை ஒன்று
கத்தினாள் கரித்துக் கொட்டினாள்
கதவை உடைத்துக் கடும் கோபம் காட்டினாள்
கட்டவிழ்ந்த மாடுகள் கட்டோடு ஓட
விட்டெறிந்த கற்கள் -அவள்
கட்டுடம்பைப் பதம் பார்த்ததுவோ
கட்டுக்கட்டாய் புற்கட்டுகளை அவள் ஒருத்தி எடுத்தெறிய
முத்து முத்தாய் நெற்குவியலும் குலைந்தே வீழ்ந்ததுவோ.
மற்றவரும் உற்றவரும்
கற்றவரும் கடும் சண்டியரும்
பார்த்து நிற்கப் பாதை வழி
ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ள
நாலுபுறம் சண்டைக்கோழிகள்