(Reading time: 1 - 2 minutes)

கவிதை - குழந்தை - ரவை

baby

1.அள்ளி அணைத்திட தோன்றுதடி!

 அழகு விழியிரண்டும் மின்னுதடி!

 கன்னமிரண்டை காண்கையிலே

 கிள்ளி முத்தமிட துடிக்குதடி!

 

2.வண்டிரண்டுகண்ணுக்குள்தெரியுதடி!

 வண்ணரதுடலோநெஞ்சையள்ளுதடி!

 எண்ணங்களில் வாழ்கின்ற எழிலரசி!

 திண்ணமாய் உனக்கீடு இல்லையடி!

 

3.கலைந்திருக்கும் குழலழகா!

 கொள்ளைகொள்ளும் முகத்தழகா!

 விலையிலா வசீகரச் சிரிப்பழகா!

 மனதில் மணக்கும் உடலழகா!

 

4.சாதிமதம் பார்க்காத பேருள்ளமே!

 கவலைகள் தீர்க்கின்ற அருமருந்தே!

 வீதி உலா வரும் ஓவியமே!

 வையகம் போற்றிடும்வெண்ணிலவே!

 

5.சிரிக்கையில் சோகம் கரையுதடா!

 செந்தமிழ் நாடே வியக்குதடா!

 கரிமுகன் இளையவன் பேரெழிலை

 கண்டேன் என்னுடல்சிலிர்க்குதடா!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.