கவிதை - மனித உருவில் காமவெறியர்! - ரவை
நாள்தொறும் நாளிதழ்
நவிலும் பேயாட்டம்!
வாளெடுத்து தலையை
வெட்டிட தோன்றும்!
பச்சிளம் பாலகர்
பையனோ பெண்ணோ
நச்சுப் பாம்புகளால்
நாசமாகின்றனர்.
சூதுசெய்து துன்புறுத்த
கண்பார்வை போனதோ!
ஏதுமறியா சிறுவர்கள்
என்னபாவம் செய்தனர்?
காமவெறிப் பேய்களை நாம்
காயறுத்து கொல்லுவோம்!
சேம முற வேண்டுமெனில்
தயக்கமதை தள்ளுவோம்!