கவிதை - மனமில்லா மிருகங்கள்! - ரவை
ஓராண்டாய் கோமாவில்
உணர்வற்று கிடந்தவளை
கர்ப்பிணி ஆக்கியவனை
கொல்லாமல் விடலாமா?
பிணந்தின்னும் கழுகுகளோ?
பாலுணர்வுப் பிண்டங்களோ?
குணமிழந்த கயவர்களை
கடுமையாக தண்டிப்போம்!
சிசுவிலிருந்து கிழவிவரை
சிதையுற்றோர் எண்ணற்றோர்!
பசுவாய் பொறுத்தது போதும்!
பிறப்புறுப்பு இல்லாமல் செய்வோம்!
நாகரிகம், பண்பாடு, அன்பு
நவில்வதெலாம் வெளிவேஷம்!
மோகத்தில் மூழ்கியவர் நம்மை
மயக்கிடவே போடுகிறார்கோஷம்!