கவிதை - பொறுத்தது போதும்! - ரவை
சந்தைக்குப் பெயர்போன பொள்ளாச்சி!
இன்றைக்கோ அவமான
களமாச்சு!
சிந்திப்போர் உளமின்று
ரணமாச்சு!
சிரச்சேதம் செய்திடவும்
முடிவாச்சு!
நான்கேபேர் ஆடியதோ
பேயாட்டம்!
ஆண்களுக்கே அவராலே
அவமானம்!
பெண்ணினத்தை இழிவாக்கி
வியாபாரம்
செய்தார்கள் பண்பாட்டு
சேதாரம்!
இளம்பெண்கள் விதவைகள்
சிறைபிடித்து
நிர்வாணக் கோலத்தில்
படம்பிடித்து
துன்புறுத்தி பாலியலில்
வீழவைத்து
தாய்க்குலத்தை சித்திரவதை
செய்தார்கள்!
நால்வரையும் அவர்பின்னே
உள்ளோரையும்
வாளெடுத்து சிரச்சேதம்
செய்திடுவோம்!
இனியிங்கே இதுபோலே
ஒருபொழுதும்
நிகழாமல் தடுத்திடவே
முனைந்திடுவோம்!