(Reading time: 1 - 2 minutes)

கவிதை - பொறுத்தது போதும்! - ரவை

fake

கட்டியணைத்து, கண்கலங்க
"நீயே என் தோழன்" என்பார்,
சத்தியம் செய்வார், பின்னாலே
சதிசெய்து குழியினிலே தள்ளிடுவார்!

உயிரே, கண்ணேயென
ஓயாமல் கொஞ்சியபின்
ஓடுவார் சொல்லாமல்
வேறொருத்தி பின்னாலே!

நேர்மையே மூச்சென்பார்,
கையூட்டு பெற்றிடுவார்!
வாய்மையே தானென்பார்,
பொய்யே பேசிடுவார்!

தரமான பொருளென்பார்,
கலப்படப் பொருள் விற்பார்!
ஒருகிலோ எடை என்பார்,
நூறுகிராம் குறைத்திடுவார்!

உங்களுக்காக நானென்பார்,
பதவிபெற்றதும், யாரென்பார்!
இருபத்திரண்டு கேரட் சொல்லி, 
பதினெட்டை விற்றிடுவார்!

சந்யாசி நானென்பார்,
சரசமுடன் பழகிடுவார்!
பந்தயம் நிஜமென்பார்,
போலியாய் தோற்றிடுவார்!

தேனாய்பேசி கடன்பெறுவார்,
திருப்பித்தரவோ மறுத்திடுவார்!
ஏனோ இந்த போலித்தனம்?
எல்லையில்லா மூடத்தனம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.