கவிதை - மாமிசப் பிண்டங்கள்! - ரவை
இன்றொரு செய்தியை கேட்டேன்,
கொன்றிடல் போலொரு செய்தி!
செய்யத்தகாதவன் செய்ததை கண்டீர்!
பெய்யாது இனி மழை! பொய்யிலை!
பெற்றவனே மகளை குழந்தைமுதல்
புற்றில்வளர் பாம்பாக தீண்டியதோர்
குற்றங்களுள் நீசத்தை கேட்டவுடன்
வெற்றுடலானதை என்சொல்வேன்!
பார்வையிழந்தவன் மதியிழந்தவனா?
வேலியேபயிரை மேய்ந்திடல்அழகா?
கூரியவாளினை கையினில் ஏந்தி
குருடனின்குடலை உருவிடவேண்டும்!
ஏனோ இப்படி மாமிசம் தின்னும்
கான்வாழ் காட்டுமிராண்டிகள்போல
ஊனுக்கலைகிற பெண்வெறியர்களை
ஊரில்வாழ்ந்திட சம்மதிக்கின்றோம்?
சோறும்தண்ணியும் கொடுத்ததுபோதும்
வேரும்வேரடிமண்ணுமில்லாமலே
கூறுகள்நூறாய் துண்டுகள்போட்டு
கழுகுக்கிரையாய் வீசி எறிவோம்!