கவிதை - அழகு! - ரவை
கதிரவன் எழுவது அழகு!
களைப்பாய் விழுவதும் அழகு!
மயிலும் ஆடுவதழகு!
குயிலும் பாடுவதழகு!
குழந்தை சிரித்தால் அழகு!
மழலை கேட்டால் அழகு!
முல்லை மலர்வது அழகு!
நிலவின் ஒளியும் அழகு!
கம்பனை படித்தால் அழகு!
பாரதி பாக்கள் அழகு!
தமிழை நினைத்தால் அழகு!
கன்னியர் முகமும் அழகு!
தென்றலின் தீண்டல் அழகு!
காவிரிப் பெருக்கும் அழகு!
அருவியின் வீழ்ச்சியும் அழகு!
அன்னையின் பாசம் அழகு!
இறைவன் நினைவே அழகு!
ஏழையர்க்கீவது அழகு!
கரையிலா கடலும் அழகு!
கரைதொடும் அலையும் அழகு!
தானம் தருவது அழகு!
வானம் மின்னுவதழகு!
வானவில் வண்ணம் அழகு!
மழைதரும் மேகம் அழகு!
கண்ணுக்கு மை அழகு!
காரிருள் கறுப்பழகு!
மண்ணுக்கு பயிர் அழகு!
பண்ணுக்கு சீர் அழகு!
இயற்கை பேரழகு!
இன்னிசை ஒலி அழகு!
வயலின் வரப்பழகு!
வையம் தனி அழகு!
அழகின் நினைவழகு!
அன்னம் நடையழகு!
பழகிய நட்பழகு!
பாரில் யாவும் அழகு!