கவிதை - தடை களையும் கணபதி! - ரவை
உனை துதித்து துவங்கும்
அனைத்து செயல்களுமே
நினைத்தபடி நடக்குமென
நம்புவோரில் ஒருவனாக
குனிந்து கரங்குவித்து
கும்பிட்டு எழுதுகிறேன்!
பணிவுடன் வாழ்த்துக்களை
படிப்போர்க்கு கூறுகிறேன்!
நீயில்லா கோவிலில்லை!
நடுவீதியில் நீயிருப்பாய்!
வாயில்லா உயிரினமாய்
முகமுனக்கு அமைந்தாலும்
ஆயிரமாயிரம் காலமாய்
அனைவருக்கும் தெய்வம்நீ!
பாயிரமாயிரம் உன்பெயரில்!
பக்தர்வாழ்வதுஉன்தயவில்!
தடை களையும் கணபதியே!
துடைத்துவிடு ஏழ்மையினை!
உடைத்துவிடு பேதங்களை!
உருவாக்கு ஒற்றுமையை!
மடைதிறந்த வெள்ளம்போல்
வளமனைத்தும் தந்துவிடு!
புடைத்துவிடு மானுடத்தை!
புதிய வாழ்வு அளித்துவிடு!