(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மனிதப் பிறவி - ரவை

மனிதனின் உருவம், உடல்!
உருவில்லாமனிதன், ஆன்மா!
உடலும் ஆன்மாவும் சேர்ந்தே
உலகில் வாழ்பவன், அறிஞன்!
உடலின் உறுப்பாம் மனமோ
உள்ளே உள்ளதை மறுக்கும்!
கடல்போல் துன்பம் நம்மை
கொன்றிட இதுதான் மூலம்!

உள்ளம், அறிவு, மனத்தின்
ஓயாப்போரே, துயரம்!
வெள்ளமென துயரம் வந்தால்
வருந்திடவேண்டாம், நண்பா!
தெள்ளத் தெளிவாய் மூன்றை
தனித்தனியாகப் பார்த்தால்,
உள்ளே நடக்கும் யுத்தம்
உனக்கு நன்றாய் புரியும்!

ஆன்மா சொல்படி கேட்பாய்!
அறிவின் மூலம் வாழ்வாய்!
ஏனென உரக்க கேட்பது
எனக்கு கேட்குது, நண்பா!
ஊனும் மனமும் உன்னை
உருக்குலைப்பது உண்மை!
ஞானம், அன்பை தந்திடும்
உள்ளம் சொல்படி வாழ்வாய்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.