(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நான் ஒரு முட்டாளுங்க! - ரவை

நான் ஒரு முட்டாளுனு
விஷயம் தெரிஞ்சவங்க
நாலுபேரு சொன்னாங்க!

ஏன்டா நம்மநாடு
இப்படி இருக்குதுன்னு
கேட்டதற்கு..........(நானொரு)

எழுபதாண்டு பின்னாலும்
ஏழ்மையிங்கு ஒழியலேன்னு
கேட்டதுக்கு......(நானொரு)

பணக்கார முதலையிடம்
ஆட்சி சிக்கி தவிக்குதுன்னு
சொன்னதினால்......(நானொரு)

பெண்களுக்கு பாதுகாப்பு
இன்னுமிங்கு இல்லையேன்னு
சொன்னதினால்...(நானொரு)

வெளிநாட்டில் பணம்பதுக்கி
வாழுறவங்க அதிகமின்னு
சொன்னதினால்...(நானொரு)

விவசாயி பட்டினியில்
சாகிறதை நிறுத்தலேன்னு
கேட்டதற்கு..(நானொரு)

கோர்ட்டில்நீதி கிடைப்பதற்கு
கோடி வருஷமாகுதுன்னு
சொன்னதற்கு..(நானொரு)

தினமும் ஒரு போராட்டம்
நாடெங்கும் நடக்குதுன்னு
சொன்னதுக்கு...(நானொரு)

பொம்பளைங்க உடலுக்காக
நாயா பேயா அலையாதேனு
சொன்னதுக்கு..(நானொரு)

பொறந்த பெண்சிசுவைக்கூட
மோகத்தினால்அழிக்காதேனு
சொன்னதுக்கு..(நானொரு)

முட்டாளுன்னு ஒத்துக்கறேன்
இல்லாவிட்டால்கைதுபண்ணி
சிறையிலடைப்பே..(நானொரு)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.