கவிதை - இனியொரு விதி செய்வோம் - ரவை
இனியொரு விதி செய்வோம்
அதை எந்தநாளும் காப்போம்
மனிதர்கள் சிறந்தோங்கிட
முனைப்புடன் உழைப்போம்!
விவசாயிகள் துயர்தீர்ந்திட
வழிவகை கண்டிடுவோம்!
புவிதனில்பசி போக்கிட
பகலிரவென உழைப்போம்!
குவலயந்தனில்படிப்பறிவினை
கடைமகனுக்கும் அளிப்போம்
தவித்திடும் ஏழைகள்நிலை
துடைத்திடதோள்தருவோம்!
பெண்ணினம்பழிப்போரினை
புடைத்தே திருத்திடுவோம்
கண்ணியமாய் நடத்திடவே
சட்டங்கள்பல வகுப்போம்!
தமிழ்மொழி தழைத்தோங்கிட
சில்சீயுடன் கைகோர்ப்போம்!
நிமிர்ந்தேநாம் வாழ்ந்திட
நால்வகையிலும்உழைப்போம்