கவிதை - நல்லதே நினை! - ரவை
வாயிருப்பதால், பேசாதே!
காதிருப்பதால், கேட்காதே!
தீயவைதவிர்க்க தயங்காதே!
அடக்கம்நல்லது மறவாதே!
ஆயகலைகளை இகழாதே!
ஆன்றோர்சொல்தவறாதே!
தூயவன்சொல் தவிர்க்காதே!
தமிழில்பேச மறுக்காதே!
நாளைசெய்திட நினையாதே!
நல்லது தள்ளிப்போடாதே!
தோள்கொடுத்து கரம்நீட்டி
தொண்டுபுரிய தயங்காதே!
நீளிடையின்றி நினைத்தாலே
நேர்மைவென்றிடும்மறவாதே!
வாளைச்சுழற்றி வையம்தனில்
வன்முறைவளர உதவாதே!